Type to search

Sports

50 இற்கு மேல் 50 முறை

Share

கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 52 ரன்கள் அடித்த டேவிட் வோர்னர், ஐ.பி.எல்.தொடரில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நேற்று முன்தினம் டுபாயில் நடைபெற்றது. டொஸ் வென்று முதலில் பட்டிங் செய்த ஐதரா பாத் 201 ரன்கள் குவித்தது.

வோர்னர் – பேர்ஸ்டோவ் ஜோடி 15.1 ஓவரில் 160 ரன்கள் குவித்தது. வோர்னர் 40 பந் தில் 52 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் 50 முறை 50 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை படைத்தார். இதில் நான்கு சதங்கள் அடங்கும்.

விராட் கோலி 5 சதங்களு டன் 42 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்து 2 ஆவது இடத் தில் உள்ளார்.

சுரேஷ் ரெய்னா ஒரு சதத்துடன் 39 முறையும், ரோகித் சர்மா ஒரு சதத்துடன் 39 முறையும், ஏபிடி வில்லியர்ஸ் 3 சதங்களுடன் 38 முறையும அரைச்சதம் அடித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link