Type to search

Sports

சுனில் நரைன் மீது நடுவர்கள் புகார்

Share

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் செய்துள்ளனர்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரான சுனில் நரைன், அபு தாபியில் நடந்த கிங்ஸ் லெவன் பஞ்சாபிற்கு எதிரான போட்டி யின் போது சந்தேகத்துக்கிடமாகப் பந்து வீசியதாக நடுவர்கள் புகார் அளித்துள்ளார்கள்.

ஐ.பி.எல்-ன் சந்தேகத்திற்கு இடமான சட்டவிரோத பந்து வீச்சு நடவடிக்கைக் கொள்கை யின்படி, களத்திலுள்ள நடுவர்கள் (ருடாயள புயனொந யனெ ஊhசளை புயககயநெல) இந்த புகார் அளித்துள்ளனர்.

புகாரை அடுத்து நரைன் எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்படுவார், மேலும் போட்டிகளில் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஒருமுறை சுனில் நரைன் மீது புகார் அளிக்க ப்பட்டால் ஐ.பி.எல்.2020 தொடரில் பந்துவீச அவருக்கு தற்காலிக தடை விதிக்கப்படும்.

நரைன், சக்கிங்கிற்காக பல முறை புகார் செய்யப்பட்டார், ஒரு கட்டத்தில் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை, அதன் பிறகு அவர் தனது பட்டிங் திறனை மேம்படுத்தினார்.

இருப்பினும், கடந்த இரண்டு ஆட்டங்களில் கொல்கத்தா அணிக்காக சுனில் நரைன் பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link