Type to search

Local News

ரஞ்சன் ராமநாயக்கவுக்குப் பிணை

Share

ஊரடங்குச் சட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நேற்று நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்தே மிரிஹான பொலிஸார் அவரை கைது செய்தனர்.

பின்னர் 14 ஆம் திகதி நுகே கொட நீதவான் நீதிமன்றத்தில் ரஞ்சன் ராமநாயக்கவை முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை நேற்றுவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் நேற்று அவருக்கு நுகேகொடை நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link