Type to search

Local News

யாழில் மதுபானம் விற்றவர் கைது! 78 போத்தல்கள் பொலிஸாரால் மீட்பு

Share

யாழ்ப்பாணம் கன்னாதிட்டிப் பகுதியில் வீடொன்றில் சட்டத்துக்குப் புறம்பாக மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 78 போத்தல்கள் (கால் போத்தல் அளவுடைய) மதுபானம் கைப்பற்றப் பட்டன என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் பிராந்தியத்துக்குப் பொறுப்பான சிரேஷ் பொலிஸ் அத்தியட்சகரின் கீழுள்ள சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸாருடன் இணைந்து இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்குச் சட்டம் நடை முறை ப்படுத்தப்பட்ட நிலையில் மது பானசாலைகளை கால வரையறையின்றி மூடுவதற்கு அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகவும் அதிக விலையிலும் மதுபானம் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link