Type to search

Local News

மருந்து வில்லைகளை அருந்திய மாணவி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழப்பு

Share

தருமபுரத்தில் மருந்து வில்லைகளை அருந்திய மாணவி ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

தொலைபேசியை கேட்டபோது தரமறுத்ததால் குறித்த மாணவி விபரீத முடிவெடுத்ததாக கூறப்படுகின்றது.

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முசுரம்பிட்டி பகுதியில் நேற்று முன்தினம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மருந்து வில்லைகள் அருந்திய நிலையில் குறித்த மாணவி தருமபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோதும் நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு தம்மல காமம் செங்கலடியைச் சேர்ந்த சந்திர சேகரன் பிரியா (வயது – 15). இவர் உறவினர் வீடான தருமபுரம், முசுரம்பிட்டி பகுதியில் வசித்து வந்த நிலையில் தருமபுரம் மத்திய கல்லூரியில் கல்வி கற்றவர் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பான விசாரணையை யாழ்.போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link