Type to search

Local News

சீரான வானிலை தொடர்ந்து நிலவும்

Share

மேல், சப்ரகமுவ மற்றும் வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களி லும் சில இடங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங் களில் பிரதானமாக சீரான வானிலை தொடர்ந்து நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. சப்ரகமுவ மாகாணத் தில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய் யும் வேளைகளில் அப் பிரதேசங் களில் தற்காலிகமாக பலத்த காற் றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களால் ஏற் படக்கூடிய பாதிப்புக்களை குறைத் துக்கொள்ள தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத் தப்பட்டது.

மழை நிலைமை:- நாட்டிற்கு தெற்காக உள்ள கடற்பரப்புக்களில் பல இடங்களில் மழையோ அல் லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப் படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காற்று :- மன்னாரிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரை யான கடற்பரப்புக் களில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களில் வட கிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும்.

காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

மாத்தறையிலிருந்து அம்பாந் தோட்டை வரையான கடற்பரப் புக்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத் துக்கு 40-45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனத் தெரிவிக் கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link