Type to search

Local News

கொரோனா தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை

Share

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் குறித்த பணிமனைக் குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பது குறித்து விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குப்பிழான் விக்னேஸ்வரா சனசமூக நிலையத்தின் அனு சரணையில் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை யால் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு கொரோனா தொடர் பான அறிவுறுத்தல் வழங்கப்பட்ட துடன் பொறுப்புணர்வுடன் செயற் படுவோம், கொரோனாவிலிருந்து எம்மைப் பாதுகாத்திடுவோம்! எனும் தலைப்பில் பொதுமக்களுக்கான விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங் களும் விநியோகிக்கப்பட்டன.

குறித்த விழிப்புணர்வு நடவடிக் கையில் மேற்படி கிராமத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எம்.இந்திரஜித், உடு வில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையைச் சேர்ந்த உத்தி யோகத்தர் பா.கஜநாதன் மற்றும் குப்பிழான் விக்னேஸ்வரா சன சமூக நிலைய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான விழிப்புணர்வு நட வடிக்கை ஏற்கனவே தாவடி, சுன் னாகம், ஏழாலை ஆகிய பகுதிகளில் உடுவில் சுகாதார வைத்திய அதி காரி பணிமனையால் முன்னெடுக் கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link