Type to search

Local News

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை மன்னாருக்கு கொண்டுவருவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு

Share

கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்துவதற்கு  மன்னார் மாவட்டத்திற்கு அழைத்து  வருவதாக பரவிய தகவலின் அடிப்படையில் மன்னார் மாவட் டத்திலும் வடக்கு கிழக்கு பகுதிகளிலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களை அழைத்துவருவதற்கு மன்னார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து மன்னார் பிரதான வீதியை மறித்து போராட்டம் ஒன்றை நேற்று மாலை முன்னெடுத்துள்ளனர்

குறித்த போராட்டத்தின் போது மன்னார் மாவட்டம் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகளை குறிவைத்து அரசாங்கம் தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள் வதாகவும் அதிகமான இடங்கள் மக்கள் நடமாட்டம் அற்ற பகுதிகளாக காணப்படுகின்ற போதும் மன்னார் பகுதியில் குறித்த கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களை அனுமதிக்க கூடாது எனவும் அவர்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பாதுகாப்பான பகுதிகளில் வைத்து தனிமைப் படுத்தி மருத்துவ சேவை வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மன்னார் மாவட்டத்திலுள்ள பகுதிகளில் அதிக மக்கள் வாழ்வதாகவும் இங்குள்ள மக்களின் நோய்களுக்கு சிகிச்சை அழிக்கவே ஒழுங்கான மருத்துவர்கள் இல்லாத நிலை யில் இவ்வாறான பாதிப்புக்கு உள்ளான வர்களை அழைத்து வருவது எங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் செயலாக உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் தெரி வித்துள்ளனர்அத்துடன் இதை மீறி பாதிக்கப்பட்டவர்களை மன்னார் மாவட்டத்திற்குள் கொண்டு வரும் பட்சத்தில் தாங்கள் பேருந்துகளை மறித்து போராட்டம் மேற்கொள்ள உள்ள தாகவும் தெரிவித்தனர.;

இந்த நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த பிராந்திய பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களுடன் உரையாடி அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாமல் தடுப்பதாகவும் அவை உறுதிப்படுத்தப்படாத செய்திகள். எனவே தாங்கள் இது தொடர்பாக கனம் செலுத்துவதாக தெரிவித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link