Type to search

Local News

கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் ஒத்திவைப்பு

Share

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந் தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளதால் எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுக் காலத்தின் பின்னர் கூடவிருந்த கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு ள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் மற்றும் கொறடா தொடர்பான நிலைப்பாடுகள் பாராளுமன்ற குழு கூட்டத்தில் முடிவெடுத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இவ்விடயம் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கூட்டமைப்பின் பேச்சாளராக என்னை நியமிப்பதாக பங்காளிக் கட்சித் தலைமை
களின் கூட்டத்தின்போதே முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் பாராளுமன்றக் குழுக் கூட்டத் தின்போதே அது உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட வேண்டும். அது இன்னும் கூடவில்லை. அதன்போதே தெரிவுகளை மேற்கொள்ள முடியும்.

எனவே உத்தியோகபூர்வமான பேச்சாளர் என்று நான் இப்போது கூறமுடியாது.

இந்தவாரம் பாராளுமன்றக் குழுக் கூட்டம் கூடுவதாக இருந்தது. எனினும் கூட்டமைப் பின் தலைவர் சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளமையால் அது தாமதமாகியுள்ளது.

எனவே கூட்டம் இடம்பெறும்போது அந்த தெரிவுகள் இடம்பெறும். அதில் எந்த பிரச்சி னையும் இருக்கப் போவதில்லை என தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link