Type to search

Events Headlines World News

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் நிறுத்தம்: வொஷிங்டனில் அடுத்த வாரம் முக்கிய பேச்சுவார்த்தை

Share

இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, முறையான போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் தொடங்கவுள்ளன.
லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனின் அலுவலகம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, இந்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் நடைபெறவுள்ளன. அமெரிக்கா இந்தப் பேச்சுவார்த்தைகளை முன்னின்று மத்தியஸ்தம் செய்யவுள்ளது.

ஒரு முறையான போர் நிறுத்தத்தை அறிவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதும், இரு நாடுகளுக்கும் இடையே நேரடி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான ஒரு குறிப்பிட்ட திகதியைத் தீர்மானிப்பதும் இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இந்தப் பேச்சுவார்த்தைகளை ஒருங்கிணைப்பதற்காக, அமெரிக்காவிற்கான லெபனான் மற்றும் இஸ்ரேலிய தூதுவர்களுக்கும், லெபனானுக்கான அமெரிக்க தூதுவருக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை முக்கிய தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link