Type to search

Headlines

நீரிழிவு உள்ளவர்கள் சுவையாக உண்ண..

Share

நீரிழிவு நிலை உள்ளவர்கள் உண்ணக்கூடிய ஆரோக்கியமான உணவுவகைகள் உண்மையிலே அனைவருக்குமே பொருத்தமான ஒரு ஆரோக்கிய உணவு முறையாக அமைந்திருக்கிறது. இந்த உணவு வகைகளை சுவை நிறைந்ததாக சமையல் செய்து உண்பது மனதுக்கும் உடலுக்கும் புத்தூக்கத்தை கொடுத்து மனிதனின் ஆரோக்கியத்தை வளர்க்க உறுதுணையாக அமையும்.

முட்டை, பால், கோழி இறைச்சி, மீன், இறால், தயிர், மோர் போன்றவை அதிக புரதத்தையும், விற்றமின்கள், கனியுப்புக்களையும் கொண்டவை. இவற்றை உங்க ளுக்குப் பிடித்த சுவையான வடிவத்தில் தயார் செய்து உண்ண முடியும்.

சமையலின் பொழுது வாச னைத் திரவியங்கள், போதியளவு உறைப்பு, புளி, மஞ்சள், இஞ்சி, சீரக வகைகள், வெந்தயம், மல்லி போன்றவற்றை வேண்டிய அள வில் சேர்த்துக் கொள்ள முடியும். இவை உடல் நலத்திற்கு நன்மை பயப்பவையாக அமைவதுடன் உணவின் சுவையையும் அதிக ரிக்க உதவும்.

மரக்கறி வகைகளை தெரிவு செய்யும் பொழுது வெவ்வேறு வர்ணங்களில் காணப்படும் பல வகை மரக்கறி வகைகளை மாறி மாறி தெரிவு செய்ய வேண்டும். அப்பொழுது தான் எல்லா வகை யான ஊட்டச் சத்துக்களும் எமக்கு கிடைக்கும். பூசணி, கரட், பீற்றூட், முள்ளங்கி உட்பட அனைத்து வகையான மரக்கறி வகைகளை யும் பயன்படுத்த முடியும். நீரிழிவு நிலை உள்ளவர்கள் பழவகைகளை உண்ண முடியாது என்ற ஒரு தப்பபிப்பிராயம் நிலவுகிறது. இது முற்றிலும் தவறானது. அன் னாசி, விளாம்பழம், பப்பாசிப்பழம், கொய்யாப்பழம், ஜம்புப்பழம், வாழைப்பழம், வத்தகப்பழம், தோடம்பழம், மாதுளம்பழம், நாவற்பழம் போன்ற பழவகைகள் சுவையும் ஊட்டச் சத்துக்களும் நிறைந்தவை. இவற்றை போதிய அளவில் உண்ண முடியும்.

பழங்கள் உண்ணும் பொழுது குருதிக் குளுக்கோசின் அளவு சற்று அதிகரித்தாலும் கூட இவற்றை உண்ணுவதால் ஏற்படும் அனு கூலங்கள் பல மடங்கு அதிகமாகும். பழச்சாறுகளில் வெல்லத்தின் செறிவு அதிகமாகும். நார்த்தன்மை குறை வாகவும் இருப்பதுடன் பசியை கட்டுப்படுத்தும் வீதமும் குறைவாக இருக்கிறது. எனவே பழங்களை பழச்சாறாக மாற்றி குடிப்பதிலும் பார்க்க பழங்களாக உண்பது சிறந்த தாகும்.

கொட்டை வகைகளான கச்சான், கடலை, மரமுந்திரிகை (கயூ), பொட்டுக்கடலை போன்றவை உடல் ஆரோக்கியத்தை வளர்க்க உத வும்.எனவே இவற்றை இடை நேரத் தில் தேனீருடன் உண்ணமுடியும். புரதச்சத்து அதிகமுள்ள பயறு, உழுந்து, சோயா, கௌப்பி, பருப்பு வகைகள் போன்றவை சுவை பட போதிய அளவில் சமைத்து உண்ண முடியும்.

மாப்பொருள் செறிவு அதிக முள்ள அரிசி, கோதுமை, ஆட்டாமா, குரக்கன் போன்றவற்றை பயன்ப டுத்தி செய்யும் உணவு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது. காரணம் இவை சமிபாடு அடையும் பொழுது அதிகளவு குளுக்கோசு உண்டாகின்றது.

ஒப்பீட்டளவில் தீட்டாத அரிசிமா, குறைவாக தீட்டப்பட்ட குத்தரிசி, உழுத்தம்மா, பயற்றம்மா போன்ற வற்றில் செய்யப்படும் உணவு வகைகள் வெள்ளைநிற அரிசி வகைகள், வெள்ளைநிற மாவ கைகளில் செய்யப்படும் உணவு களிலும் பார்க்க சிறந்தவையாகும்.

மாப்பொருள் அதிகமுள்ள உணவு வகைகளை உண்ணும் பொழுது உணவுக் கோப்பையில் அரைப் பங்கு இலை வகைகள், மரக்கறி வகைகளால் நிறைந்திருப்பது அவ சியமாகும்.

உணவிலே சீனி, சர்க்கரை, பனங்கட்டி, குளுக்கோசு போன்ற வற்றை தவிர்த்து அவற்றிற்குப் பதிலாக தேவை ஏற்படின் இனிப்புச் சுவையுள்ள இனிப்பூட்டிகளை பயன் படுத்துவது நல்லது. இந்த இனிப்புச் சுவையுடைய இனிப்பூட்டிகள் உடல் நிறையையோ அல்லது குருதி குளுக் கோசின் அளவையோ அதிகரிக்க மாட்டாது.

எண்ணெய், பட்டர், கொழுப்பு என்பன அதிகமுள்ள பொரித்த உணவு வகைகளுக்குப் பதிலாக “பக்” செய்யப்பட்ட உணவு வகை களை தெரிவு செய்வது நல்லது.

உப்பை முற்றாக தவிர்த்து விட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அளவான உப்பு சேர்த்து சுவையாக சமையல் செய்ய முடியும். உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பதப்ப டுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்து விடுவது நன்மை பயக் கும்.

அதிகளவு பழவகைகளையும், மரக்கறிவகைகளையும் உண்பது எம்மை மாரடைப்பு, உயர்குருதி அமுக்கம், பாரிசவாதம், நிறை அதிகரிப்பு, கொலஸ்ரோல் அதிக ரிப்பு போன்ற நோய் நிலைகளி லிருந்து பாதுகாக்கும்.

வீட்டின் அன்றாட பாவனைக்கு சிறிய உணவுக் கோப்பைகளை யும், சிறிய தேநீர் பேணிகளையும் பயன்படுத்துவோம். இது நாம் மேலதிகமாக உண்பதை தவிர்க்க உதவும்.

சோறு, பிட்டு போன்றவற்றை பரிமாறுவதற்கு சிறிய கரண்டி களையும் மரக்கறி வகைகளை பரிமாறுவதற்கு பெரிய கரண்டி களையும் பயன்படுத்துவோம்.

உணவை ஆறுதலாக சுவை த்து ரசித்து உண்ணும் பழக் கத்தை வளர்த்துக் கொள்ள வேண் டும். ஒரே வகையான உணவில் அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் அடங்கி இருக்காது. எனவே நாம் உண்ணும் உண வின் வகைகளை மாற்றிக் கொள் வது பயன்தரும்.

DR. சி. சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link