Type to search

Headlines

நீரிழிவு உள்ளவர்கள் சுவையாக உண்ண…

Share

நீரிழிவு நிலை உள்ளவர்கள் உண்ணக்கூடிய ஆரோக்கிய மான உணவு வகைகள் உண்மையிலே அனைவருக்குமே பொருத்தமான ஒரு ஆரோக்கிய உணவு முறையாக அமைந்திருக்கிறது. இந்த உணவு வகைகளை சுவை நிறைந்ததாக சமையல் செய்து உண்பது மனதுக்கும் உடலுக்கும் புத்தூக்கத்தை கொடுத்து மனிதனின் ஆரோக்கியத்தை வளர்க்க உறுதுணையாக அமை யும்

சுவையாக எவற்றை உண்ண முடியும்?

முட்டை, பால், கோழி இறை ச்சி, மீன், இறால், தயிர், மோர் போன்றவை அதிக புரதத்தையும், விற்றமின்கள், கனியுப்புக்களையும் கொண்டவை. இவற்றை உங்களுக்குப் பிடித்த சுவையான வடிவத்தில் தயார் செய்து உண்ண முடியும்.

சமையலின் பொழுது வாசனைத் திரவியங்கள, போதியளவு உறைப்பு, புளி, மஞ்சள், இஞ்சி, சீரகவகைகள், வெந்தயம், மல்லி போன்றவற்றை வேண்டிய அளவில் சேர்த்துக் கொள்ள முடியும். இவை உடல் நலத்திற்கு நன்மை பயப்பவையாக அமைவதுடன் உணவின் சுவையையும் அதிகரிக்க உதவும்.

மரக்கறி வகைகளை தெரிவு செய்யும் பொழுது வெவ்வேறு வர்ணங்களில் காணப்படும் பலவகை மரக்கறி வகைகளை மாறிமாறி தெரிவுசெய்ய வேண ;டும். அப்பொழுது தான் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களும் எமக்கு கிடைக்கும்.

பூசணி, கரட், பீற்றூட், முள்ளங்கி உட்பட அனைத்து வகையான மரக்கறி வகைகளையும் பயன்படுத்த முடியும்.

நீரிழிவு நிலை உள்ளவர்கள் பழ வகைகளை உண்ண முடியாது என்ற ஒரு தப்பபிப்பிராயம் நிலவுகிறது. இது முற்றிலும் தவறானது.
அன்னாசி, விளாம்பழம், பப்பாசிப்பழம், கொய்யாப்பழம், ஜம்புப் பழம், வாழைப்பழம், வத்தகப்பழம், தோடம்பழம், மாதுளம்பழம், நாவற்பழம் போன்ற பழவகைகள் சுவையும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்தவை. இவற்றை போதிய அளவில் உண்ணமுடியும்.

பழங்கள் உண்ணும் பொழுது குருதிக் குளுக்கோஸின் அளவு சற்று அதிகரித்தாலும்கூட இவற்றை உண்ணுவதால் ஏற்படும் அனுகூலங்கள் பல மடங்கு அதிகமாகும். பழச்சாறுகளில் வெல்லத்தின் செறிவு அதிகமாகும். நார்த்தன்மை குறைவாகவும் இருப் பதுடன் பசியைக் கட்டுப்படுத்தும் வீதமும் குறைவாக இருக்கிறது. எனவே பழங்களை பழச்சாறாக மாற்றி குடிப்பதிலும் பார்க்க பழங்களாக உண்பது சிறந்ததாகும்.

கொட்டை வகைகளான கச்சான், கடலை, மரமுந்திரிகை (கயூ), பொட்டுக்கடலை போன் றவை உடல் ஆரோக்கியத்தை வளர்க்க உதவும். எனவே இவ ற்றை இடை நேரத்தில் தேநீருடன் உண்ணமுடியும். புரதச்சத்து அதிக முள்ள பயறு, உழுந்து, சோயா, கௌப்பி, பருப்பு வகைகள் போன் றவை சுவைபட போதிய அளவில் சமைத்து உண்ண முடியும்.

உணவு முறையில் எந்த வகையான மாற்றங்கள் செய்ய முடியும்?

மாப்பொருள் செறிவு அதிக முள்ள அரிசி,கோதுமை, ஆட் டாமா, குரக்கன் போன்றவற்றை பயன்படுத்தி செய்யும் உணவு வகைகளை குறைத்துக் கொள் வது நல்லது. காரணம் இவை சமி பாடு அடையும் பொழுது அதிகளவு குளுக்கோஸ் உண்டாகின்றது.

ஒப்பீட்டளவில் தீட்டாத அரிசிமா, குறைவாக தீட்டப்பட்ட குத்தரிசி, உழுத்தம்மா, பயற்றம்மா போன் றவற்றில் செய்யப்படும் உணவு வகைகள் வெள்ளை நிற அரிசி வகைகள், வெள்ளைநிற மாவகை களில் செய்யப்படும் உணவுக ளிலும் பார்க்க சிறந்தவையாகும்.

மாப்பொருள் அதிகமுள்ள உணவு வகைகளை உண்ணும் பொழுது உணவுக் கோப்பையில் அரைப்பங்கு இலைவகைகள், மரக்கறி வகைகளால் நிறைந்தி ருப்பது அவசியமாகும்.

உணவிலே சீனி, சர்க்கரை, பனங்கட்டி, குளுக்கோசு போன் றவற்றை தவிர்த்து அவற்றிற்குப் பதிலாக தேவை ஏற்படின் இனிப்புச் சுவையுள்ள இனிப்பூட்டிகளை பயன்படுத்துவது நல்லது.

இந்த இனிப்புச்சுவையுடைய இனிப்பூட்டிகள் உடல் நிறை யையோ அல்லது குருதி குளுக் கோஸின் அளவையோ அதிகரிக்க மாட்டாது.

எண்ணெய், பட்டர், கொழுப்பு என்பன அதிகமுள்ள பொரித்த உணவு வகைகளுக்குப் பதிலாக “பக்” செய்யப்பட்ட உணவு வகை களை தெரிவு செய்வது நல்லது.

உப்பை முற்றாக தவிர்த்து விட வேண்டும் என்றஅவசியம் இல்லை. அளவான உப்பு சேர் த்து சுவையாக சமையல் செய்ய முடியும்.உப்பு அதிகம் சேர்க்கப் பட்ட பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை தவிர்த்து விடுவது நன்மை பயக்கும் அளவுக்கு அதிகமான உப்பு வகைகள் தவிர்க்கப்பட வேண்டும்.

உணவுமுறை சம்பந்த மான சில தகவல்கள்

அதிகளவு பழவகைகளையும், மரக்கறி வகைகளையும் உண் பது எம்மை மாரடைப்பு, உயர் குருதி அமுக்கம், பாரிசவாதம், நிறை அதிகரிப்பு, கொலஸ்ரோல் அதிகரிப்பு போன்ற நோய் நிலை களிலிருந்து பாதுகாக்கும்.

வீட்டின் அன்றாட பாவனை க்கு சிறிய உணவுக் கோப்பை களையும், சிறிய தேநீர் பேணிக ளையும் பயன்படுத்துவோம். இது நாம் மேலதிகமாக உண்பதை தவிர்க்க உதவும்.

சோறு, பிட்டு போன்றவற்றை பரிமாறு வதற்கு சிறிய கரண்டி களையும் மரக்கறி வகைகளை பரிமாறுவதற்கு பெரிய கரண்டி களையும் பயன்படுத்துவோம்.

உணவை ஆறுதலாக சுவை த்து ரசித்து உண்ணும் பழக்க த்தை வளர்த்துக் கொள்ளவேண் டும். ஒரே வகையான உணவில் அனைத்து வகையான ஊட்டச் சத்துக்களும் அடங்கி இருக்காது. எனவே நாம் உண்ணும் உண வின் வகைகளை மாற்றிக் கொள் வது பயன்தரும்.

உள்ளுரிலே உற்பத்தியாகும் இயற்கையான உடன் உணவு வகைகளை தெரிவு செய்வது பல வழிகளிலும் நன்மை பயக்கும்

Dr. சி. சிவன்சுதன் ,
பொது வைத்திய நிபுணர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link