Type to search

Headlines

கேள்வி பதில்…….

Share

பசுப்பாலா ஆடை நீக்கிய பால்மாவா சிறந்தது?

அதிகரித்த கொலஸ்ரோல் நிலை உள்ளவர்களுக்கு பொது வாக ஆடை நீக்கிய பால் மாவகை (Non-Fat) சிபார்சு செய்யப்பட்டு வருகின்றது. இந்த வகை பால்மாவிலே பசுப்பா லுடன் ஒப்பிடுகையில் கொழுப் பின் அளவு குறைவு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் இந்த வகையான பால்மா உற் பத்தியின் பொழுது பாலுக்கு பலவகையான செயற்கையான மாற்றங்கள் செய்யப்படுகின்றன. அத்துடன் பல்வேறு வகையான இரசாயனப் பொருட்கள் சேர்க்கப் படுகின்றன.

இதனால் பாலின் இயற்கை யான சுவையும் குன்றிப் போகி ன்றது. அத்துடன் இதன் விலை யும் ஒப்பீட்டளவில் அதிகமாகும்.

ஆடை நீக்கிய பால்மா வகை களுடன் ஒப்பிடும் பொழுது பசுப் பால் இயற்கையானது. இரசாய னங்கள் எதுவும் சேர்க்கப்ப டாதது. சுவையானது. மலிவா னது. அனைத்து வகையான இயற்கையான ஊட்டச்சத்துக் களை கொண்டது. பசுப்பாலிலே கொழுப்பு வீதம் சற்று அதிகமாக இருந்தாலும் அது ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கப் போவ தில்லை. காரணம் மனிதன் உண்ணும் உணவின் கலோரி பெறுமானத்தில் 30மூ கொழுப்பு இருக்க வேண்டும். அந்தக் கொழுப்பு பால்மூலம் எமக்கு கிடைப்பது தீங்கு எதனையும் செய்து விடாது.எனவே இயற்கையான உடன் பசுப்பால் ஆடை நீங்கிய பால்மா வகைகளிலும் பார்க்க சிறந்தது. அதிகரித்த கொலஸ்ரோல் நிலை உள்ளவர்களும் பசுப் பாலை பாதுகாப்பாக அருந்த முடியும்.

நீரிழிவு உள்ளவர்கள் பழங் களை உண்ணலாமா?

ஆம். கனிந்து பழுக்காத பழவ கைகளை உண்ண முடியும். பதப்படுத்தப்பட்ட பழவகைகளை அதாவது இறக்குமதியாகி வரும் பேரீச்சம்பழங்கள் உலர்த்திய பழவகைகளை தவிர்த்துவிடுவது நல்லது. பழவகைகள் உண்ணும் பொழுது குருதி வெல்லமட்டம் தற்காலிகமாக சற்று அதிகரித் தாலும் உடன் பழங்களை உண் ணுவதால் ஏற்படும் அனுகூலங் கள் மிக அதிகம்.

பழவகைகளை எவ்வேளை யில் உண்ணுவது சிறந்தது?

உணவு உண்பதற்கு முன் பழவகைகளை உண்டு அதன் பின் உணவு அருந்துவது நல்லது. இது நாம் உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பதுடன் சமிபாட்டு நொதியங்கள் வினைத் திறனுடன் தொழிற்படுவதற்கும் உதவும்.

தீட்டாத சிவப்பு அரிசி மாவா அல்லது ஆட்டாமாவா உடல் நலத்திற்கு நல்லது?

ஆட்டாமாவில் இருப்பது கோதுமை மாவும் வெள்ளை தவிடும். தீட்டாத சிவப்பு அரிசி மாவில் இருப்பது சிவத்ததவிடும் அரிசிமாவும். அரிசிமா கோதுமை மாவிலும் சிறந்தது என்பது எம் அனைவருக்கும் தெரியும். சிவத்த தவிடு வெள்ளைத் தவிடிலும் பார் க்க ஊட்டச்சத்து கூடியது என்பதும் எமக்குத் தெரியும்.

அதன் காரண மாகத்தான் ஆடு, மாடு போன்ற வற்றிற்கு கூட சிவத்த தவிட்டை வாங்கி வைக்கின் றோம். எனவே ஆட்டாமாவிலும் பார்க்க தீட்டாத சிவத்த அரிசிமா சிறந்தது என்பதில் எதுவித சந் தேகமும் இல்லை.

வைத்தியசாலைக்கு சென்று குருதி அமுக்கத்தை அளக்கும் சந்தர்ப்பங்களில் பதற்றம் காரணமாக எனது குருதி அமுக் கம் தற்காலிகமாக அதிகரிக் கிறது. இதன் காரணமாக எனது உண்மையான குருதி அமுக்கத்தை கண்டறிவது கடினமாக உள்ளது. இதற்கு என்ன செய்யலாம்?

நீங்கள் டிஜிற்றல் குருதி அமுக் கம் அளக்கும் கருவி ஒன்றை வீட்டில் வாங்கி வைத்துக் கொள் ளுங்கள். வெவ்வேறு சந்தர்ப் பங்களில் நீங்களாகவே உங்கள் குருதி அமுக்கத்தை அளந்து பதித்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வைத்தியரை சந்திக்கும் பொழுது அந்த வாசிப்புகளை காண்பியுங்கள்.

உங்கள் குருதி அளக்கும் கருவியையும் வைத்தியசாலை க்கு எடுத்துச் சென்று அங்கு வைத்தும் உங்கள் குருதி அமுக் கத்தை அளந்து பாருங்கள். இவற்றிலிருந்து உங்கள் குருதி அமுக்கம் தற்காலிகமாக அதி கரிக்கிறதா? உங்களின் உண் மையான குருதி அமுக்கம் என்ன? என்பவற்றை அறிந்து கொள்ளலாம்.

மெற்போமின் மாத்திரை சிறுநீரகங்களை பாதிக்குமா?

இல்லை.மெற்போமின் மாத்தி ரையே நீரிழிவு நிலைக்கு பாவிக் கப்படும் மாத்திரைகளில் அதிவி சேடமானது. பாதுகாப்பானது. ஆனால் சிறுநீரகங்கள் பாதிக் கப்பட்டிருக்கும் நீரிழிவு நோயா ளர்களுக்கு இந்த மாத்திரையை பாவிக்க முடியாத ஒரு துர்ப் பாக்கிய நிலை காணப்படுகிறது. இவர்களுக்கு மெற்போமின் தவிர்ந்த ஏனைய மருந்துகளே வழங்கப்படுகின்றது.

நீரிழிவு நிலை உள்ளவர் கள் உருளைக் கிழங்கு உண்ணலாமா?

ஆம். உண்ண முடியும். 100 கிராம் உருளைக் கிழங்கிலே 20 கிராம் அரிசிமாவில் இருக்கும் மாப்பொருளே இருக்கிறது. எனவே உணவில் சோறு, இடியப் பம், பிட்டு போன்ற மாப் பொருட் களை குறைத்து அதற்கு பதிலாக உருளைக்கிழங்கை சேர்த்துக் கொள்ளலாம்.

Dr.சி.சிவன்சுதன்
பொது வைத்திய நிபுணர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link