Type to search

Headlines

வடக்கை மிரட்டும் கொரோனா வைரஸ் மேலும் இருவர் உயிரிழப்பு 82 பேருக்கு தொற்று உறுதி

Share

வட மாகாணத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவி வருகின்றது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் வடக்கில் உயிரிழந்துள்ளனர்.


நேற்றும் யாழ்.மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கில் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.மாவட்டத்தில் 67 பேர் உட்பட வடக்கில் 82 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதன்படி நேற்றைய தினம் 769 பேருடைய பி.சி.ஆர் மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் 82 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.


யாழ்.மாவட்டத்தில் 67 பேருக்கும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.


மேலும் வவனியா கற்பகபுரத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
மற்றும் கிளிநொச்சி கிருஸ்ணபுரம் கோவிட் தடுப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த வவுனியா இறம்பைக்குளத்தைச் சேர்ந்த ஒரு வரும் உயிரிழந்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link