Type to search

Headlines

புதுக்குடியிருப்பில் கொரோனா கொத்தணி 322 பேருக்கு ஒரே நாளில் தொற்று உறுதி

Share

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு ஆடைத் தொழிற்சாலையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 322 பேருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து புதுக்குடியிருப்பு, முள்ளியவளை பகுதிகள் முடக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் நேற்று 926 பேருக்கு நடத்தப்பட்ட கொவிட் – 19 பரிசோதனையில் 322 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில் புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பகுதிகள் முடக்கப்படுகிறது.

மேற்படி தகவலை தேசிய கோவிட் செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link