Type to search

Headlines

20ஆவது திருத்தத்தை உருவாக்க ஐவர் அடங்கிய குழு நியமனம்

Share

இலங்கை அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் உருவாக்கத்துக்கான சட்டமூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சக்தி வலு அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 20வது திருத்தம் உருவாக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதை தொடர்ந்து சட்ட வரைபு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link