Type to search

Headlines

வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

Share

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இலகுநாதன் செந்தூரன், நேற்றுமுன்தினம் மாலை முதல் காணாமல்போன நிலையில் தொண்டைமானாறு கடலில் நேற்று அதிகாலை அவர் சடலமாக கண்டறியப்பட்டார்
.
தொண்டைமானாறு மயிலதனை இந்து மயானத்துக்கு அண்மையாக கடற்கரை பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதை அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் இரவு 7.20 மணியளவில் கண்டுள்ளனர்.

அது தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கினர்.

இரவு 8.30 மணியளவில் அந்த இடத்துக்குச் சென்ற பொலிஸார், அங்கு காணப்பட்ட மணிப்பையிலிருந்த (பேர்ஸ்) தேசிய அடையாள அட்டையை வைத்து இலகு நாதன் செந்தூரன் (வயது – 37) என்பவருடையது என்று உறுதி செய்தனர்.

சம்பவம் தொடர்பில் செந்தூரனின் வீட் டுக்கு அறிவிக்கப்பட்டது.

அவர்கள் உறவினர்கள், செந்தூரனின் நண்பர்கள் சகிதம் தொண்டைமானாறு பகுதியில் அவரைத் தேடினர்.

இந்த நிலையில் அவரது உடைமைகள் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து அண்மையாக உள்ள கடலில் செந்தூரன் சடலமாக மீட்கப்பட்டார்.

பருத்தித்துறை நீதிவானின் உத்தரவில் அவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் நேற்று முற்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

“சடலத்தின் கழுத்து உட்பட உடலில் எந்த வொரு அடிகாயமும் இல்லை. கடல் விலங்கு களால் சடலத்தில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகத்தில் உரசல் காயம் காணப் படுகிறது.

நுரையீரல் பெரியளவில் வீக்கமடைந்துள்ளது. அதனால் அவரது இறப்பு நீரில் மூழ்கி இடம்பெற்றுள்ளது என்று சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செந்தூரன் மண்கும்பானைச் சொந்த இடமாகக் கொண்டதுடன் முன்னாள் போராளி யுமாவார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link