Type to search

Headlines

யாழ்.குடாநாடு முழுவதும் தொடர்ந்து முடக்கம்

Share

கொரோனா வைரஸ் பரவும் அபாயம் காரணமாக யாழ்ப்பாணம் தொடர்ந்து முடக்கப்படுகின்றது. தற்போது அமுலில் இருக்கும் ஊரடங் குச் சட்டம் மறு அறிவித்தல்வரை தொடர்ந்து அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு அமுல்படுத் தப்பட்ட ஊரடங்குச் சட்டம் ஏப்ரல் 01, புதன் காலை 6.00 மணி வரை அமுலில் இருக்கும்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்காக மாவட்டங்களுக் கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்தியாவசிய சேவைகளை வினைத் திறனாக பேணும் வகையில் நடைமுறை யில் உள்ள முறைமைகளை துஷ்பிர யோகம் செய்பவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கு உதவும் நடைமுறைகள் மக்களின் நலனுக்காகவே என்பதால் அந்த நடை முறைகளையும் அறிவுறுத்தல்களையும் பொறுப்புடன் பின்பற்றுமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அடுளுகம தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப் பிடப்பட்டுள்ளது.

எவரும் இந்த கிராமத்துக்கு உள்வருவதோ அல்லது வெளியேறுவதோ மறுஅறிவித்தல் வரை முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link