Type to search

Headlines

மாவை சேனாதிராஜாவுக்கே தேசியப் பட்டியல் ஆசனம்

Share

2020 பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கே வழங்க வேண்டுமென தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

மேற்படி ஆசனம் அம்பாறை மாவட்டத்தின் கலையரசனுக்கு வழங்குவதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜ சிங்கம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்டக்கிளை உறுப்பினர்கள் யாழ்.மாட்டின் வீதியிலுள்ள தலைமை அலுவலகத்தில் நேற்றுக் காலை அவசரமாக கூடினர்.

இதன்போது தேசியப் பட்டியல் ஆசனம் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்கே வழங்கப்பட வேண்டுமெனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link