Type to search

Headlines

மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம்

Share

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்­ தலைமையிலான புதிய அரசாங்கத் தில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்து செய்தால் பலவீனமாக அரச நிர்வாகம் தோற்றம் பெறும் என்றும் ஆகவே 13ஆவது திருத்தம் ஒருபோதும் இரத்துச் செய்யப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஒருமித்த நாட்டுக்குள் 13 ஆவது அரசியலமைப் பின் திருத்தம் ஊடாக அதிகாரப் பகிர்வை வழங்குவதாக கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ளக் கூடியது என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களுக்கு அரசியலமைப்பின் பிரகாரம் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அத்தீர்வு ஒருமித்த நாட்டுக்குள் முரண்படாத விதத்தில் அமைய வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கொள்கைத் திட்டங்களை புதிய அரசாங்கத்தில் முழுமையாக செயற்படுத்த ஆளும் தரப்பில் கூட்டணி யமைத்துள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் இணக் கம் தெரிவித்துள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில் பொதுத் தேர்தலுக்கான பொதுஜன பெரமுன தனித்து கொள்கைத் திட்டத்தை தயாரித்தால் நிறை வேற்றுத்துறைக்கும், சட்டத்துறைக்கும் இடையில் வீண் முரண்பாடுகளை தோற்று விக்கும் என்றும் சுட்டிக் காட்டினார்.

மேலும் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டம் ஒரு இனத்தையும் ஒரு மதத்தையும் வரை யறுத்ததாக அமைய வில்லை எனச் சுட்டிக் காட்டிய வாசு தேவ நாணயக்கார, அரசியலமைப்பின் 13ஆவது திருத் தத்தை இல்லா தொழிப்பதாக ஆளும் தரப்பினர் தாங்கள் பிரபல்ய மாகுவதற்காக கருத்துக்களை தெரிவிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link