Type to search

Headlines

மதிலுக்குள் அகப்பட்ட இளைஞனை காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் உயிரிழப்பு

Share

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, தேவிபுரம் பகுதியில் தனியார் பால் கொள்வனவு நிலையம் ஒன்றில் பணிபுரிந்த இளைஞன் ஒருவர் மதில் வீழ்ந்து, அதற்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய சௌந்தராஜன் சயந்தன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் நேற்று முன்தினம் இரவு மதில் மீது ஏறி பக்கத்து காணிக்குள் பாய முற்பட்ட போது மதில் இளைஞன் மீது விழுந்துள்ளது.

இதன்போது மதிலுக்குள் அகப்பட்ட இளைஞன் காயமடைந்த நிலையில் காப்பாற்ற யாரும் இல்லாத நிலையில் உயிரிழந்துள்ளார்.

நேற்றுக் காலை பால் கொள்வனவு நிலையத்திற்கு சென்ற பண்ணையாளர்கள் இளைஞனை காணாது தேடிய போது அவர் அருகில் வீழ்ந்து கிடந்த மதிலுக்குள் அகப் பட்டு உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சடலத்தினை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
மருத்துவமனையின் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link