Type to search

Headlines

போதைப் பொருட்களுடன் வவுனியாவில் மூவர் கைது

Share

வவுனியாவில் ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களுடன் 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிதம்பரபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 420 மில்லிகிராம் மற்றும் 310 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், தேக்கவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது 390 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 43,000 ரூபாய் பணம் என்பவற்றுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link