Type to search

Headlines

பொலிஸாரைக் கண்டு ஓடிய இளைஞன் விபத்தில் பலி

Share

பொலிஸை கண்டதும் தலை தெறிக்க ஓடிய இளைஞன் ஒருவர் விபத்துக்குள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வரணியில் நேற்று முன்தினம் பகல், தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளில் இரு இளைஞர்கள் பயணித்தனர். இதன் போது வீதியில் பொலிஸாரின் வாகனம் வருவதைக் கண்டு, அதிவேகமாக தப்பி யோடியுள்ளனர்.

கொடிகாமம் – பருத்தித்துறை வீதி காப்பெற் வீதியாக மாற்றும் பணிகள் நடந்து வருகிறது. வீதி அபிவிருத்தியில் ஈடுபடும் நிறுவனத்தின் டிப்பர் வாகனத்துடன் – வரணி வைத்தியசாலையின் முன்பாக மோதி இரு இளைஞர்களும் விபத்திற்குள்ளாகினர்.

இதில் வரணி நாவற்காடு பகுதியைச் சேர்ந்தவர்களான எஸ். பிரான்சஸ் சைமன் (வயது-26) மற்றும் யோகேந்திரன் கோகுலன் (வயது – 26) என்ற இருவரும் படு காயமடைந்த நிலையில் வரணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டி ருந்தனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த இளைஞர்களில் எஸ்.பிரான்சஸ் சைமன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link