Type to search

Headlines

தெல்லிப்பளையில் ஒரே சூலில் மூன்று குழந்தைகள் பிரசவிப்பு

Share

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை ஒரே சூலில் உருவான மூன்று குழந்தைகள் சத்திர சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.

சாவகச்சேரி பகுதியினைச் சேர்ந்த திருமதி சுகந்தன் என்ற ஆசிரியை ஒருவருக்கே இவ்வாறு மூன்று குழந்தைகள் கிடைக்க பெற்றுள்ளன.

இரண்டு ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் இவ்வாறு ஒரே சூலில் கிடைக்கப் பெற்றுள்ளது.

பெண்ணியல் வைத்திய நிபுணர் என்.சரவணபவன் மற்றும் தெல்லிப்பளை ஆதாரவைத் தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் எஸ். ஜெயபாலன் ஆகியோரின் முயற்சி யினால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இந்த குழந்தைகள் சத்திரசிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்டுள்ளன.

தற்போது தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளதாக குறிப்பிடும் விடுதி வைத்தியர், அவர்கள் வெகு விரைவில் வீடு திரும்புவார்கள் எனத் தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link