Type to search

Headlines

பொலநறுவையில் 5 வயது சிறுமிக்கு கொரோனா

Share

பொலநறுவை, லங்காபுர பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நேற்று மேலுமொரு கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.

லங்காபுர பிரதேச செயலகத்தில் இணைக்கப்பட்ட சிவில் பாதுகாப்பு படை வீரரின் ஐந்து வயதுடைய மகளே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளில் சிவில் பாது காப்புப் படைக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதன்பிறகு, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இதன் போதே, 5 வயதுடைய மகள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார்.

லங்காபுர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், இதுவரை 12 கொரோனா நோயா ளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link