Type to search

Headlines

பாடசாலை ஆரம்பிப்பதற்கான காலம் நீடிக்கப்படலாம்

Share

பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் காலம் நீடிக்கப்படலாம் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலைகளின் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய மேலும் தாமதமடையலாம் என அமைச்சின் செயலாளர் என்.எச்.சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு முன்னர், அடையாளங் காணப்பட்ட பாடசாலைகளில் கிருமித் தொற்று நீக்கி விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link