Type to search

Editorial

இல்லறம் எனும் உயர் அறம் உலகம் எல்லாம் பரவிட

Share

கொரோனாத் தொற்று உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது.

மருத்துவத்திலும் விஞ்ஞானத்திலும் உச்சம் பெற்ற நாடுகள் கூட, கொரோனாவுக்கு ஈடு கொடுக்க முடியாத அளவில் திண்டாடிப் போயுள்ளன.

இதற்குக் காரணம் கொரோனாத் தொற்றைத் தடுப்பதென்பதற்குள் வாழ்வியல் நடை முறைகளும் பழக்கவழக்கங்களும் அடங்கியுள்ளன.

பொதுவில் மேற்குலக நாடுகள் ஒழுக்கநெறிகளையும் குடும்ப வாழ்வியல் முறைகளையும் மனித சுதந்திரத்துக்கான தடைஎன்றே கருதின.

இதனால் அந்நாடுகளில் சுயகட்டுப்பாடுகளும் தனி மனித ஒழுக்கங்களும் இல் வாழ்க்கை முறைகளும் முற்றாக சிதைந்து போய், இரவுநேர விடுதிகளில் களியாட்டங்களும் இரவு நேர விருந்துகளும் ஆண் பெண் என்ற பேதமை இல்லாத மதுப்பாவனைகளும் புகைத்தல்களுமே அவர்களின் வாழ்க்கையாயிற்று.

இந்நிலையில் மனிதரிடம் இருந்து மனிதருக்கு சுவாசம், தொடுகை எனப் பரவக்கூடிய கொரோனா மேற்குலகை சங்காரம் செய்கிறது.

இதுதவிர சீன தேசத்தில் கொரோனாத் தொற்று ஏற்பட்டு விட்டது என்றவுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளை உடனடியாக அமுல்படுத்த வேண்டியது கட்டாயமாக இருந்த போதிலும் விதி வசம் போல் உலக நாடுகள் அது விடயத்தில் அசமந்தமாகவே இருந்து விட்டன.

இதனால் இன்று ஒரு லட்சம் பேர் கொரோனா நோய்க்கு பலியாகிவிட்ட பெருந்துயரை இந்த உலகம் அனுபவித்து நிற்கிறது.

இவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கை எடுத்த தீர்மானங்களும் நடவடிக்கைகளும் உயர்வானவை என்பதை ஏற்றுத்தானாக வேண்டும்.

இறைவழிபாட்டையும் இறை நம்பிக்கையையும் மனித வாழ்வின் ஒழுக்கமாகக் கொண் டுள்ள இலங்கை மக்கள், கொரோனா தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாப்பதில் வெற்றி பெறுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கை மனித அவலத்தைத் தடுக்கும் என்பது மட்டுமன்றி,

குடும்ப ஒழுங்கமைப்பைக் கடைப்பிடிக்கின்ற இலங்கை போன்ற நாடுகளைச் சேர்ந்த மக் கள் குடும்பத்தின் வழி நின்று பின்பற்றுகின்ற இல்லறத்தை உலகம் முழுவதும் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் மேலெழுவதற்கான சந்தர்ப் பங்களும் உருவாகியுள்ளன.

ஆகையால் இல்லறம் எனும் பெரும் அறம் எங்கும் பரவி இந்த உலகம் தெய்வீக வாழ்வு வாழ்வதற்கு நாம் அனைவரும் உதவ வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link