Type to search

Headlines

பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவு மறு பரிசீலனை செய்யப்படும்

Share

கொழும்பில் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்ததன் காரணமாக மே 11 அன்று பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யவுள்ளது.

இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங் களை மீண்டும் திறப்பது தொடர்பான எந்த வொரு முடிவும் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் மட்டுமே எடுக்கப்படும் என தெரிவித்தார்.

பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பதற் கான தீர்மானிக்கும் அதிகாரம் துணைவேந் தர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

முன்னதாக, அந்தந்த பல்கலைக்கழகங்களின் கல்வி ஊழியர்களுக்கான பணிகளை மீண்டும் தொடங்க முடிவு செய்திருந்தோம் இருப்பினும் முடிந்தவரை ஒன்லைனில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள அவர்களை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link