Type to search

Headlines

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு

Share

யாழ்.மண்டைதீவில் நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்றுப் பிற்பகல் வேளை இச் சோக சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மண்டைதீவில் வயல் காணி ஒன்றில் வெட்டப்பட்டிருந்த கேணியில், அண்மை யில் பெய்த மழை காரணமாக நீர் தேங்கி நிறைந்து காணப்பட்டுள்ளது.

குறித்த வயல் பகுதிக்குச் சென்ற இரு சிறுவர்களும் கேணியில் தவறிவிழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இதில் மண்டைதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இராசகுமார் சாவிதன் (வயது-7), இராசகுமார் சார்வின் (வயது-5) ஆகிய சகோதரர்களே உயிரிழந்தவர்களாவர்.

மேற்படி சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link