Type to search

Headlines

நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய ஐந்து வாரங்களின் பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்படும்

Share

நாடு வழமை நிலைமைக்கு திரும்பிய ஐந்து வாரங்களின் பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக் குழுவின் தலைவர் மகிந்த தேசப் பிரிய தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலை நடத்தும் தினம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு இதுவரை தீர் மானிக்கவில்லை.

தேர்தல் நடத்தப்படும் தினம் எனக் கூறி பல்வேறு வதந்திகள் பரவிவருவதுடன் சமூக வலைத்தளங்களிலும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

காணப்படும் அனைத்து நிலைமைகள் சம்பந்தமாகவும் கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழு நாளை கூடவுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link