Type to search

Headlines

நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு தளர்வு

Share

நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இது தொடர்பில், ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளதாவது,

இன்று முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித் தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல் படுத்தப்படும்.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போதும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், அலு வலகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களில் பணிகளை மேற்கொள்ளும் போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அதிகாரிகளால் பரிந்துரைக்கப் பட்டுள்ள நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்.

நோய்த்தொற்று நீக்குதல், முகக்கவசங்களை அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இவற்றில் அடங்கும்.

அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர் எண்ணிக்கை மற்றும் யாரை சேவைக்கு அழைப்பது என்பதை அந்த நிறுவனங்கள் வழங்கும் சேவைகள் மற்றும் சுகாதார வழிகாட்டல்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் அதிகாரம் குறித்த நிறுவனங் களின் தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னரும் சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி நாளாந்தப் பணிகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.


அத்துடன் இன்று முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட் டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link