Type to search

Headlines

கொரோனாவால் குவைத்திலிருந்து நாடு திரும்பிய பெண் மரணம்

Share

குவைத்திலிருந்து அண்மையில் நாடு திரும்பிய பெண் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 10 ஆக உயர்வடைந்துள்ளது.

குவைத்திலிருந்து நாடு திரும்பிய திருகோணமலை மங்கி ப்ரிட்ஜ் இராணுவ தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத் தப்பட்டிருந்த 51 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

அவர் கோவிட் – 19 நோயால் பீடிக்கப்பட்டிருந்தமை பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதியாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அவர், பயாகலை பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கடந்த 20 ஆம் திகதி 466 பேர் கொண்ட குழுவினருடன் அவர் குவைத்திலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தபோது உயிரி ழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் இதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் தொடர்பான இறுதிக்கிரியைகள் தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு அமைய மேற்கொள்ளப்படவுள்ளன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link