Type to search

Headlines

தீக்காயத்துக்குள்ளான இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு

Share

தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம் குடும் பப் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த சிவகுமார் தூபிகா (வயது – 22) என பொலிஸார் தெரிவித்தனர்.

திருமணமாகி சில வாரங்களே ஆன மேற்படி இளம் குடும்பப் பெண் தீக்காயங் களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை காலை அவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link