Type to search

Headlines

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடி வந்த மற்றுமொரு தாய் முல்லையில் மரணம்

Share

முல்லைத்தீவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி வந்த மற்றுமொரு தாய் உயிரிழந்துள்ளார்.

இதில் முல்லைத்தீவு மாணிக்கபுரம் விசுவமடு பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மைக்கல் யேசு மேரி எனும் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

கடந்த 2009ஆம் ஆண்டு மாத்தளன் பகுதியில் குறித்த தாயின் மகனான மைக்கல் ஜோசப் என்பவர் காணாமலாக்கப்பட்ட நிலையில் தன்னுடைய மகனை தேடி தொடர்ச்சியாக முல்லைத்தீவில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவில் இந்த தாயாருடன் தமது உறவுகளை தேடிவந்த 18 உறவுகள் உயிரிழந்த நிலையில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link