Type to search

Headlines

கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டோர் சுயதனிமையை கடைப்பிடியுங்கள்

Share

தனிமைப்படுத்தல் நிலையங் களில் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் வீடுகளில் மீளவும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கடைப் பிடிக்குமாறு இராணுவத் தளபதியும் கொரோனா தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

தென் கொரியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் கண்காணிக்கப்பட்டு வீடு திரும்பிய ஒருவருக்கு 10 நாட்களின் பின்னர் கொரோனா தொற்றுள்ளமை கண்டறிப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இராணுவத் தளபதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link