Type to search

Headlines

ஊரடங்கில் காரணமின்றி யாழ்.நகர் வலம் வந்த 37 பேர் கைது

Share

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு வேளையில் காரணமின்றி நகருக்குள் வருகை தந்த 37 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

27 ஆண்களும் 10 பெண்களும் உள்ளடங்கலாக 37 பேர் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நகரில் நேற்று மருந்தகங்கள், வங்கிக் கிளைகள் திறந்த நிலையில் மக்களின் வருகை அதிகமாகக் காணப்பட்டது.

இதனால் முற்பகல் 10 மணியளவில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக வந்திறங்கிய யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை யிலான பொலிஸார் வீதித் தடையை ஏற்படுத்தி வாகனங்களில் செல்வோரிடம் விசாரணை நடத்தினர்.

இதன்போது, மருந்தகங்களுக்கு செல்வதற்கான மருத்துவரின் சிட்டை காண்பித்த வர்களும் அத்தியாவசிய சேவைகளுக்கான அடையாள அட்டை வைத்திருந்தவர்களும் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

காரணமின்றி பயணித்தவர்களை பொலிஸார் கைது செய்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link