உயர்தரத்தில் சாதித்த மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு
Share

முல்லைத்தீவு மாவட்டத்தில் உயர்தரத்தில் சாதித்த மாணவன் ஒருவன் குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று மாலை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமடு குளத்தில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவன் புதுக்குடியிருப்பு கைவேலியைச் சேர்ந்த 20 வயதுடைய பிரதீப்குமார் வளர்சிகன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் குறித்த மாணவன் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் உயர்தரப் பரீட்சை 2019 வர்த்தகப் பிரிவில் மாவட்ட ரீதியில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளான் எனவும் அறிய முடிகின்றது.
சம்பவ இடத்திற்குச் சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை முன் னெடுத்து வருகின்றனர்.