Type to search

Headlines

செவ்வாய் முதல் ஊரடங்கு நாடு முழுவதும் தளர்வு

Share

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பி வைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே 26 செவ்வாய் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

மே 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட் டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும்.

இன்று 24 ஞாயிறு மற்றும் நாளை 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link