Type to search

Headlines

மூவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த இராணுவம்

Share

தம்மைத் தாக்கியதாக தெரிவித்து மூவரைப் பிடித்து இராணுவத்தினர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உரும்பிராய்ப் பகுதியில் உள்ள இராணுவக் காவலரணில் நின்ற இராணுவத்தினருக்கு நேற்று மாலை தாக்குதல் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இம்மூவரும் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய்ப் பொலிஸார் தெரி வித்தனர்.

இராணுவத்தினரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூவரும் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மூவர் மீதும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link