உட்கார்ந்து உணவு உட்கொள்ள அனுமதி
Share

வடக்கு மாகாணத்தில் உணவகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சில இன்று சனிக்கிழமை தொடக்கம் தளர்த்தப்படுவதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அதனடிப்படையில் வடக்கு மாகாணத்தில் உள்ள உணவகங்களின் இருக்கைகளுக்கு (இடவசதிக்கு) ஏற்ப 50 சதவீத மானவர்கள் உட்கார்ந்து உணவு உட்கொள்ள முடியும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.