Type to search

Headlines

4 மோட்டார் சைக்கிளில் வந்த குழு அட்டகாசம்

Share

சாவகச்சேரி – கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இரவு அத்துமீறி ஆயுதங்களுடன் நுழைந்த குழு வொன்று வீடு மற்றும் வாகனம் ஆகிய வற்றுக்கு சேதம் விளைவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு 7.45 மணி யளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த குழுவொன்று வீட்டிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியதுடன், வீட்டின் முன்பக்க கண்ணாடிகளை யும் அடித்து சேதப்படுத்திவிட்டு தப்பித்துச் சென்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link