விரைவில் லெபனானுடன் பேச்சுவார்த்தை!
Share
லெபனானுடன் முடிந்தவரை விரைவில் நேரடிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குமாறு தமது அமைச்சரவைக்கு உத்தரவிட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நேரடிப் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்குமாறு லெபனானிடமிருந்து விடுக்கப்பட்ட தொடர்ச்சியான கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, நேற்று தனது அமைச்சரவையிடம் இதனை அவர் கோரியதாக ‘X’ தளத்தில் ஹீப்ரு மொழியில் குறிப்பிட்டுள்ளார்.
ஹிஸ்புல்லா அமைப்பை நிராயுத பாணியாக்குதல் மற்றும் இஸ்ரேல் – லெபனான் இடையே அமைதியான உறவுகளை ஏற்படுத்துதல் ஆகிய விடயங்களில் இந்தப் பேச்சுவார்த்தைகள் கவனம் செலுத்தும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


