லண்டனுக்கு பயணம் மேற்கொள்ளும் ஹரிணி
Share
பிரதமர் ஹரினி அமரசூரிய இன்று (18) பிற்பகல் லண்டன் பயணமாகியுள்ளார் .
இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறும் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார் . இதற்கான பிரதிநிதிகளாக மேலும் இருவர் இணைந்து கொண்டுள்ளனர்.
அவர்கள் இன்று பிற்பகல் 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நகருக்கு ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல். (U.L.) – 403 இலக்க விமானத்தில் மட்டுமே புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
பிரதமர் உள்ளிட்ட குழுவினர் இந்த விஜயத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23ஆம் திகதி மீண்டும் தாயகம் திரும்பவுள்ளனர்.


