Type to search

Headlines Local News News

மீண்டும் உயர்கிறது மசகு எண்ணெய் விலை!

Share

மத்திய கிழக்கில் தொடர்ந்து நீடித்து வரும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையை மீண்டும் ஒரு புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.

இன்று வர்த்தகம் ஆரம்பமான போது, சர்வதேச சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் (Brent Crude) ஒரு பீப்பாயின் விலை 2.2 சதவீதத்தால் அதிகரித்து, 111.43 டொலராக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், WTI ரக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாயின் விலை 2.7 சதவீதத்தால் உயர்ந்து, 114.57 டொலராகப் பதிவாகியுள்ளது.

தொடர்ச்சியான போர் காரணமாக விநியோகக் கட்டமைப்புகளில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளே இந்த திடீர் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த விலை அதிகரிப்பானது எரிசக்தி நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தக்கூடும் என பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link