Type to search

Headlines Local News News

பட்டதாரிகளுக்கான ஆசிரியப் போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு

Share

நாடளாவிய ரீதியில் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை பூர்த்தி செய்வதற்கான போட்டிப் பரீட்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

இலங்கை ஆசிரியர் சேவைக்கு பட்டதாரிகளை உள்வாங்கும் போட்டிப் பரீட்சை 2023 (2026) நேற்று (24) நடைபெற்றது. 

நாடளாவிய ரீதியிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் ஏனைய பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கும் இந்த போட்டிப் பரீட்சையானது நாடு முழுவதும் 1,048 பரீட்சை நிலையங்களில் இடம்பெற்றிருந்ததாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

இப்பரீட்சைக்காக அரச சேவையிலுள்ள 66,991 விண்ணப்பதாரர்களும், ஏனைய பிரிவைச் சேர்ந்த 96,442 விண்ணப்பதாரர்களும் விண்ணப்பித்திருந்ததுடன், விசேட தேவையுடைய 323 விண்ணப்பதாரர்களும் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகளையும் பரீட்சைகள் திணைக்களம் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. 

முன்னதாக 2023 ஆம் ஆண்டில், அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கான போட்டிப் பரீட்சையொன்றை நடத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் திட்டமிட்டிருந்தது. 

எனினும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்த ஒரு வழக்கு ஆகியன காரணமாகக் குறித்த பரீட்சை நீண்டகாலமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. 

தற்போது அனைத்து வழக்கு நடவடிக்கைகளும் நிறைவடைந்திருப்பதையடுத்து, நாடு முழுவதும் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குத் தீர்வை வழங்கும் நோக்கில், அரச சேவையிலுள்ள பட்டதாரிகளும் ஏனைய பட்டதாரிகளும் தோற்றக்கூடிய வகையில் இம்முறை பரீட்சை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link