Type to search

Headlines Local News News

சீனி ஏற்றுமதியை நிறுத்திய இந்தியா!

Share

இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்துவதற்கு எடுத்துள்ள தீர்மானம் காரணமாக, ஏனைய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

பிரேசில், தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்வது குறித்து தற்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் சீனி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. 

இந்த ஏற்றுமதித் தடையானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இலங்கைக்கு அதிகளவில் சீனி இந்தியாவிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தத் தடையின் காரணமாக மாற்று நாடுகளிலிருந்து சீனியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை இலங்கைக்கு ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இருப்பினும், தற்போது நாட்டிற்குள் போதுமான அளவு சீனி கையிருப்பு உள்ளதுடன், புதிய இருப்புகளை விரைவாக இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதால் சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

ரூபாவிற்கு நிகரான டொலரின் மதிப்பு உயர்வடைந்ததன் காரணமாக தற்போது சந்தையில் சீனி விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அது இந்தியா சீனி ஏற்றுமதியை நிறுத்தியதால் ஏற்பட்ட ஒன்றல்ல என்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link