Type to search

Headlines News World News

இஸ்ரேலிய மீட்பு ஹெலிகாப்டர் மீது ட்ரோன் தாக்குதல்!

Share

தெற்கு லெபனானில் களப்பணியில் இருந்த இஸ்ரேலிய மீட்பு ஹெலிகாப்டர் ஒன்றை ஹிஸ்புல்லா அமைப்பின் தற்கொலை படை ஆளில்லா விமானம் குறிவைத்துத் தாக்கியுள்ளது. 

காயமடைந்த வீரர்களை மீட்கச் சென்ற இடத்தில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது.

எல்லையோரப் பகுதியில் காயமடைந்த இஸ்ரேலிய வீரர்களை ஏற்றிச் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரைமட்டத்திற்கு அருகே வந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்ற தருணத்தில், வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானம் அதை நோக்கி அதிவேகமாகப் பாய்ந்து வந்தது.

ஹெலிகாப்டரின் தற்காப்பு அமைப்புகள் மற்றும் விமானியின் துரிதச் செயல்பாட்டால் ட்ரோன் ஹெலிகாப்டரின் மிக அருகில் வெடித்துச் சிதறியது.

“மீட்புப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்துவது சர்வதேச விதிகளுக்குப் புறம்பானது” என இஸ்ரேல் கண்டனம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

புது வடிவங்களுடன் e-paper இல் படிக்க 

e-paper செல்க 
close-link