இந்தியாவின் ஜார்கண்ட் மாநிலத்தில் சாலையோரக் கடை ஒன்றில் பானிபூரி சாப்பிட்ட 18க்கும் மேற்பட்ட சிறுவர்கள் மற்றும் 2 பெரியவர்களுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 வயது ...
தெற்கு லெபனானில் களப்பணியில் இருந்த இஸ்ரேலிய மீட்பு ஹெலிகாப்டர் ஒன்றை ஹிஸ்புல்லா அமைப்பின் தற்கொலை படை ஆளில்லா விமானம் குறிவைத்துத் தாக்கியுள்ளது. காயமடைந்த வீரர்களை மீட்கச் சென்ற இடத்தில் இந்தத் தாக்குதல் அரங்கேறியுள்ளது. எல்லையோரப் பகுதியில் காயமடைந்த இஸ்ரேலிய வீரர்களை ஏற்றிச் செல்வதற்காக ஹெலிகாப்டர் தரைமட்டத்திற்கு அருகே வந்தபோது ...
ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹொக்கைடோவில் இன்று (27) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி 6.2 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சரபெட்சு நகருக்கு மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. மேலும் ...
கனடாவின் மேனிடோபா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புற பாடசாலைக்கு துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வந்த பதின்ம வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேனிடோபா க்ருந்தல் (Grunthal) பகுதியில் உள்ள ‘கிரீன் வேலி’ (Green Valley) பாடசாலைக்கு ஆயுதங்களுடன் ஒரு சிறுவன் வருவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் ...
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி நேற்று (24) இரவு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை சென்றடைந்துள்ளார். அமெரிக்காவுடன் அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முன்மொழிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக அவர் அங்கு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, ஈரான் தமது கோரிக்கைகளை உள்ளடக்கிய முன்மொழிவு ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ...
சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறுவர்கள் சிறுவர்களாகவே வளர்வதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். விளையாட்டுகள், ...
தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன. தமிழகத்தின் 234 தொகுதிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி தமிழக சட்டப் பேரவை தேர்தலில் 84.51 ...
ஈரானுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டின் மீது மீண்டும் தாக்குதல்களைத் தொடுக்க அமெரிக்க இராணுவம் தயாராக இருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சி.என்.பி.சி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த போர்நிறுத்தக் காலத்தைப் பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் தனது தளவாடங்களைப் புதுப்பித்துக்கொண்டுள்ளது. எங்களிடம் ...
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திட்டங்களுக்கு அதிகளவு முதலீடு செய்யவுள்ளதால் அடுத்த மாதம் தனது ஊழியர்களில் சுமார் 8,000 பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தவிர வெற்றிடமாக உள்ள ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளையும் நிரப்பப்போவதில்லை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மாத்திரம் செயற்கை நுண்ணறிவு ...
ரித்தானிய பாராளுமன்றத்தில் புகைத்தல் தொடர்பான பிரேரணை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலண்டனில் 17 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய சிறுவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. புகைப்பழக்கமற்ற ஒரு தலைமுறையை உருவாக்கும் நோக்கில் கடைகளில் புகையிலை விற்பனை செய்வதை சட்டவிரோதமாக்குவதன் ...