ஈரானின் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையினர், ஹோர்மூஸ் நீரிணைப் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டு மூன்று வணிகக் கப்பல்களைச் சிறைபிடித்துள்ளனர். சர்வதேச கடல்சார் விதிகளை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, ‘எபமினன்டோஸ்’ , ‘எம்.எஸ்.சி. பிரான்சிஸ்கா’ மற்றும் கிரேக்க நாட்டுக்குச் சொந்தமான ‘யுபோரியா’ ஆகிய கப்பல்கள் ஈரானியப் படையினரால் முடக்கப்பட்டுள்ளன. ...
ஈரானுடனான போர்நிறுத்தத்தை நீடிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குச் சில மணிநேரங்களுக்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிகொண்டும் உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியும் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த ...
ஜப்பானின் வடக்குப் பகுதியில் இன்று 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவாட் மாகாணம் மற்றும் ஹொக்கைடோ பகுதிகளில் 3 மீற்றர் உயரம் வரையிலான அலைகள் தாக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளதுடன், அப்பகுதி மக்களை ...
சீனாவின் பீஜிங் நகரில் மனிzதர்களும் ரோபோக்களும் மரதன் ஓட்டத்தில் பங்கேற்ற விசித்திரமான நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்த போட்டியில் தமது போட்டியாளர்களான மனிதர்களை பின்தள்ளி ரோபோக்கள் முன்னிலைப் பெற்றன. இதில் வெற்றிபெற்ற Lightning என்ற மனித ரோபோ சீனாவின் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை தயாரிக்கும் Honor நிறுவனத்திற்குரியது. குறித்த ரொபோ ...
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் உயர்வடைந்துள்ளது. இதற்கமைய பிரென்ட் ரக மசகு பீப்பாய் ஒன்றின் விலை 96.25 டொலராக பதிவாகியுள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90.15 டொலராக காணப்படுகிறது. ஈரான் – அமெரிக்க அமைதிப் பேச்சுவார்த்தை நிச்சயமற்ற நிலையில் இருப்பதால் ...
அமெரிக்க – இஸ்ரேல் ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கப் பேச்சுவார்த்தையாளர்கள் நேற்று (19) பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திற்குப் பயணித்ததுள்ளார்கள் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். சமூக ஊடகத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இஸ்லாமாபாத்தில் ஈரானிய பேச்சுவார்த்தையாளர்களுடன் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தைக்கு ...
லுாசியானா: அமெரிக்காவின் லுாசியானாவில் நடந்த துப்பாக்கி சூட்டில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, ஒன்று முதல் 14 வயதுடைய 8 குழந்தைகள் கொல்லப்பட்டனர். அமெரிக்காவின் லுாசியானா மாகாணத்தின் ஸ்ரீவ்போர்ட் நகரில் நேற்று அதிகாலை ஒரு வீட்டில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. குடும்ப சண்டை காரணமாக அங்கிருந்த 11 பேர் ...
மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள கடலோர கிராமம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 200 வீடுகள் சேதமாகியுள்ளன. அந்நாட்டு அரச செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, இன்று (19) அதிகாலை 01:32 மணியளவில் இந்தத் தீ பரவியுள்ளது. குறித்த பகுதியில் ...
அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி ஆசியாவின் ஆகச்சிறந்த கோடீஸ்வரராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின் முதற்பெரும் கோடீஸ்வரராக விளங்கிய முகேஷ் அம்பானி, இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். புளூம்பெர்க் பிில்லியனர்கள் குறியீட்டின் (Bloomberg Billionaires Index) படி, கௌதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு ...
ஈரானின் வான்பரப்பு இன்று(18) காலை முதல் பகுதி அளவில் மீண்டும் திறக்கப்படுவதாக அந்த நாட்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு அறிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவி வந்த பாதுகாப்பு பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் வான்பரப்பு மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை குறித்த விரிவான மதிப்பீடுகளைத் தொடர்ந்து, வான்வழிப் போக்குவரத்துக்கான ...