திருகோணமலை கந்தளாய் சீனித்தொழிற்சாலைக்குரிய விதை நாற்றுப் பண்ணையில் நான்கு ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட கரும்புத் தோட்டத்திற்கு இனந்தெரியா தோரால் தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் சீனித்தொழிற்சாலையை அண்டிய பகுதியில் எம்.சி.சுகர்ஸ் லங்கா நிறுவ னத்தால் நான்கு ஏக்கர் கரும்புச் ...
ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளை வெளிநாட்டு மதுபான விற்பனை நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் இருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ரிகிலகஸ்கட பிரதேசத்தில் நேற்றுக்காலை இச்சம்பவம் இடம் பெற்றது. மேற்படி விற்பனை நிலையத்திலிருந்த மதுபான போத்தல்களைப் பிறிதொரு இடத்திற்கு எடுத்துச்செல்ல முயற்சிப்பதாக மதுவரித்திணைக்கள அதிகாரிகளுக்கு ...
அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எதிர்தரப்பினர் அரசியல் அமைப்பு நெருக்கடியை தோற்றுவிக்க முயற்சிக்கின்றார்கள் என கைத்தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டினார். ஜனாதிபதியால் மாத்திரமே கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை, புதிய அரசாங்கம் தோற்றம் பெற முன்னர் கூட்ட முடியும் என்பதை எதிர்க்கட்சியினர் நன்கு அறிந்தும் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு மாற்று ...
பெப்ரவரியில் சஜித் பிரேமதாஸ கடந்த பெப்ரவரி மாதம் எச்சரித்ததை அரசாங்கம் செவி மடுத்திருந்தால், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியிருக்கலாம் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “உங்களுக்குத் தெரியும், ...
பொதுச் சுகாதார அதிகாரி ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று முன்தினம் இரவு உறுதிப்படுத்தப்பட்டது. இலங்கையில் பதிவான 416 ஆவது கொரோனா தொற்றாளராக இவர் அடையாளம் காணப்பட்டார். கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டாக்டர் ருவான் விஜேமுனி இத னைத் தெரிவித்தார். இதேவேளை நேற்று ...
உரும்பிராய் கிழக்குப் பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபரிடமிருந்து 24 லீற்றர் கசிப்பு மற்றும் அதனைத் தயாரிக்கப் பயன் படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். இதேவேளை மதுபானசாலைகள் பூட்டப்பட்ட நிலையில் கசிப்பு உற்பத்தி ...
யாழ்.மாவட்டத்துக்கு பல்வேறு தேவைகளுக்காக வருகை தந்து தமது சொந்த இடங்களுக்கு திரும்ப முடியாமல் இருந்த 2000 பேர் தற்போது அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில். கொரோனா ...
மேல் மாகாணத்தில் நாய் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்த தகவலை பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் மறுத்துள்ளது. ஜாஎல – சுதுவெல்ல என்ற இடத்தில் உள்ள நாய் ஒன்றுக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் ...
ஒரு கிலோ மஞ்சள் தூளிற்கான அதிகபட்ச சில்லறை விலைக்கான வர்த்தமானி நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஒரு கிலோ மஞ்சள் தூளின் அதிக பட்ச சில்லறை விலை ரூபாய் 750 என நுகர்வோர் விவகார அதிகார சபை தெவித்துள்ளது.
ஊரடங்குச் சட்டத்தின் போது பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நேற்று நீதிமன்றால் பிணை வழங்கப்பட்டுள்ளது. மாதிவெல குடியிருப்புத் தொகுதியில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டின் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரினால் வழங்கப்பட்ட தகவலை அடுத்தே மிரிஹான பொலிஸார் அவரை ...